Sunday, October 31, 2021

உடுவில் அரவிந்தன் அவர்களின், ஆகாரமே ஆதாரம் நூல் அறிமுகம்.

 #உடுவில் #அரவிந்தன் அவர்களால் எனது "ஆகாரமே ஆதாரம் " புத்தகத்துக்கான #நூல் #அறிமுகம் - இன்றைய உதயன் சஞ்சீவி வாரமலரில் (30.10.2021).

#நன்றி.



Monday, October 25, 2021

ஆகாரமே ஆதாரம் - எனது நூல் பற்றிய மருத்துவர் க. ஶ்ரீதரன் அவர்களின் பார்வை.


மருத்துவர் தி.சுதர்மன் அவர்கள் எழுதிய ஆகாரமே ஆகாரம் நூல் வெளியிடப்பட்டது. 

இந்நூலானது சித்தமருத்துவத்தில் உணவின் பயன்பாடு. சித்தமருத்துவமும் உணவும் என்பவற்றுடன், பாரம்பரிய உணவு பயன்பாட்டு முறைகள், பத்தியம் காக்கும் முறைகள், நவீன  அறிவியலில் உணவு, துரித உணவுகள். அவற்றின் கேடுகள், இலங்கையின் பாரம்பரியமாக பெண்கள் பூப்பெய்யும் போதும், கர்ப்பகாலத்திலும் அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவே, மருத்துவ முறைகள் என பல அவரின் சித்தமருத்துவ அறிவு. உணவும் போசணையும் பாடத்தில் பெற்றுக்கொண்ட அறிவினையும் பயன்படுத்தி அனுபவம், தேடல் , களப்பணி என்பவற்றோடு அவற்றை இலகுவாக விளங்கக்கூடிய வகையில் கையடக்கமாக எழுதியிருப்பது நன்று. 


எனினும் சிறு குறைபாடு காணப்படுகிறது. அவர் உளவியலில் பாண்டித்தியம் பெற்றிருந்தும் உளவியலும் உணவும் எனும் தலைப்பில் சிறிதாக ஆராய்ந்திருக்கலாம். 

இன்றைய காலகட்டத்தில் உணவின் மூலம் பல உளவியல்  நோயாளிகளுக்கு சிகிச்சை செய்து வருகிறோம்.  இன்றைய இளம்சமுதாயம் துரித உணவுகளுக்கு அடிமையாகி வரும் காலத்தில் எமக்கு அடுத்த தலைமுறையின் சாவினை பார்க்கும் கடைசித்தலைமுறை நாம் என்ற நிலையில் அதற்கு சிறந்த ஒரு விழிப்புணர்வு கிடைத்திருக்கிறது.

 மொத்தத்தில் தம்பி சுதர்மன் அனுபவம். அறிவு.தேடல். களப்பணி என்பவற்றுடன் இப்புத்தகத்தை உணர்ந்து எழதியிருப்பது சிறப்பானது. அட்டைப்படம் நாம் முன்பு பாடசாலையில் படிக்கும் போது கல்யாணவீடா வாழையிலை வடை பாயசத்தோடு சாப்பிட்ட  அனுபவம்  எமது ஆழ்மனத்தில் இருந்து வருவதை உணர்த்துகிறது. 

மொத்தத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் இம்மலர் சித்தமருத்துவ மாணவர்களுக்கு. மருத்துவர்கள். ஆராய்ச்சி மாணவர்கள்.  என பலருக்கும் பயனுள்ளதாகவும் எமது பிரதேசத்தில் பாட்டி. தாத்தா போன்றோர் வெளிநாட்டிலும். இறந்து போன நிலையியலும் அவர்கள் எம்மோடு இருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது. 

அன்புடன் 

மருத்துவர் க.ஶ்ரீதரன்

அண்ணன்

மருத்துவர் க. ஶ்ரீதரன்


உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.