நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, மூத்திரக்கிரிச்சரம்.
இந்நோய்
எக்காரணங் கொண்டு உற்பத்தியானதோ அதனை நீக்குதல் வேண்டும். வெப்பத்தை உண்டாக்கக் கூடிய
உணவுகளை (கோழி இறைச்சி, மிளகாய் சார்ந்த உணவுகள், உள்ளி,……) உண்ணக்கூடாது, வெயிலில்
திரிதல், கள், சாரயம் அருந்தக் கூடாது, நெருப்பு, சூடு சார்ந்த வேலைகள் செய்தல் கூடாது,
அளவு கடந்த கலவி கூடாது.
இவற்றுக்காக
தனியான பரிகாரம் கூறப்படாவிடினும் சில அனுபவ முறைகள் “நோய்களுக்கு சித்த பரிகாரம்”
எனும் நூலில் பின்வரும் பரிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடுவிளநீர் சேர்த்தரைத்து
பனியில் வைத்துண்ண நீர்க்கடுப்பேறும்”- ஏடு.
புளியம்பழத்திலுள்ள
முற்றிய புளியங்கொட்டையின் மேல் தோலை மட்டும் சேகரித்து இளநீர் விட்டரைத்து இளநீரில்
கலக்கி இரவு பனியில் வைத்திருந்து காலை, மாலை சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு கொட்டு மூத்திரம்,
நீர் எரிச்சல் இவை தீரும்.
02. “ புளிக்கொட்டை தின்று விடிற்
போகுமே நீக்கடுப்பு
அளிச்சேர்க்குழன் மாதரன்பு” – குணபாடம்.
நீர்க்கடுப்புள்ளபோது
புளியின் கொட்டையை வாயிலிட்டுமென்று தின்ன உடனே நிற்கும்.
புளியங்கொட்டைத்தோல் சூரணத்தினை நீர்க்கடுப்புநிவாரணி எனக் குறிப்பிடப்படுகின்றது. எமது உணவுப்பழக்கத்தில் புளியங்கொட்டையை வறுத்து
உண்ணும் பழக்கம் இருந்து வருகின்றது. ஆனால் இன்று அது அருகி வந்துவிட்டது. அப்படி புளியங்கொட்டையை கடித்தாலும் பற்கள்தான் தற்போது நொறுங்கிவிடும்.அந்தளவுக்கு
எமது பலமிருக்கிறது.
தொடரும்…
2 comments:
Superb
Superb
Post a Comment