Monday, January 27, 2020

வேர்க்குரு, கோடைக் கொப்பளம்

கோடைக் காலத்தில் வியர்வை அதிகமாகும். சிலருக்கு இதனால் தோலில் நமைச்சல் உண்டாகி சிறு சிறு குருக்கள் அல்லது பருக்கள் தோன்றி தோலில் கடி உண்டாகும்.

இது முகம், கை, மார்பு, முதுகு போன்ற இடங்களில் அதிகம் உண்டாகும். கடி, தினவுடிஏற்படும்போது சொறிந்தால் அழற்சி, எரிவு ஏற்பட்டு கொப்பளங்கள் உருவாகும். கிருமி தொற்றினால் சிதழும் காணப்படும்.

இவற்றினை தடுக்க உள்ளழலாற்றி தன்மையுடைய நன்னாரி குடிநீர், இளநீர், மோர், சந்தன ஊறல் குடிநீர் முதலியவற்றை அருந்திவரலாம்.
வேர்க்குரு உள்ள இடங்களுக்கு,

1.சந்தனப்பூச்சு,
2. சந்தனம் (1 பங்கு), பச்சைக்கற்பூரம் (1/4 பங்கு) என்பவற்றை சேர்த்து நீர்விட்டரைத்து பூசலாம்.
3. பனைநுங்கு நீர்
4. வெந்நீர்விட்டரைத்த தேங்காய்ப்பாலில் சீரகத்தை அரைத்துப் பூசலாம்
5. வெந்நீர்விட்டரைத்த தேங்காய்ப்பாலில் ஏலம், கார்போகரிசி, ஆலம்பட்டை அல்லது அரசம் பட்டை என்பவற்றை சேர்தரைத்து பூசலாம்.

 மேற்படி முறைகளை த்துவர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்திக்கொள்ளவும்.

Monday, January 20, 2020

சிறுநீரகக் கற்கள்.



மக்களில் பலரது இன்றைய முறைப்பாடு சிறுநீரகத்தில் கல் என்பதாகும். இதற்கான தீர்வு சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அகத்தியர் 2000 எனும் நூலில் பின்வரும் பாடல்கள் மூலம் கூறப்பட்டுள்ளது.

மாவிலங்கு வர்நிலத்தில் வடக்கெழுந்த வேரும்
வருமினியப் பெருவழியில் முட்படா நெருஞ்சிவேரும்
பேயிலகு சுடுகாட்டுப் பிராமுட்டி வேரும்
பீளையிவை நிற்கக் சிறுபூளைவேரும்
காயிலங்கு மொழிமடவார் யட்டொன்றாய்க் காய்ச்சி
கல்லெரிப்ப னெள்பதக்குச் சொல்லும் வகை கேளீர்
வாயிலங்கு வைத்திடிலோ வந்துவிழுங்கல்லு
அடுத்தருந்தில் சாற்றிட்டுப் படுத்தகல்லும் விழுமே.

உவர்நிலத்தில் விளையும் மாவிலங்கின் வடக்கே போகும் வேர்
நெருஞ்சில் வேர்
சுடுகாட்டில் விளையும் பேராமுட்டி வேர்
பீளை வேர்
சிறுபீளை வேர்
             
இவற்றை சமனெடை எடுத்து (தலா 10கிராம்) ஒரு போத்தல் (750மி.லீ) நீர்விட்டு எட்டில் ஒன்றாக வற்றவைத்து மருத்துவரின் ஆலோசனைக்கமைவாக அருந்துதல் வேண்டும்.

அல்லது,
முத்தானாளடித்த காற்று முதுநரிக்கொம்பு வேரு
மித்திரன் குதிரைவாலு மிலாமிச்சு சந்தனமும்
அந்தமிலாளை யேத்தி அடைவுடன் குடித்தபோது
மந்தமுமற்றுக் கல்லு மாசறவிட்டுப்போமே.

வெங்காரம்
முதியார்கூந்தல்
சந்தனத்தூள்
சுக்கு
இலாமிச்சை வேர்

இவற்றை சமனெடை எடுத்து (தலா 10கிராம்) ஒரு போத்தல் (750மி.லீ) நீர்விட்டு எட்டில் ஒன்றாக வற்றவைத்து மருத்துவரின் ஆலோசனைக்கமைவாக அருந்துதல் வேண்டும்.

தற்காலத்தில்,

சாதாரண மாவிலங்கம் பட்டை
நெருஞ்சில் வேர்
நீர்முள்ளிவேர் என்பவற்றின் குடிநீரையும் வாழைத்தண்டின் சாற்றினையும் மருத்துவரின் ஆலோசனைக்கமைவாக பயன்படுத்த கல் கரையும்.

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.