மக்களில்
பலரது இன்றைய முறைப்பாடு சிறுநீரகத்தில் கல் என்பதாகும். இதற்கான தீர்வு சித்தமருத்துவத்தில்
கூறப்பட்டுள்ளது. அகத்தியர் 2000 எனும் நூலில் பின்வரும் பாடல்கள் மூலம் கூறப்பட்டுள்ளது.
மாவிலங்கு வர்நிலத்தில் வடக்கெழுந்த வேரும்
வருமினியப் பெருவழியில் முட்படா நெருஞ்சிவேரும்
பேயிலகு சுடுகாட்டுப் பிராமுட்டி வேரும்
பீளையிவை நிற்கக் சிறுபூளைவேரும்
காயிலங்கு மொழிமடவார் யட்டொன்றாய்க் காய்ச்சி
கல்லெரிப்ப னெள்பதக்குச் சொல்லும் வகை கேளீர்
வாயிலங்கு வைத்திடிலோ வந்துவிழுங்கல்லு
அடுத்தருந்தில் சாற்றிட்டுப் படுத்தகல்லும்
விழுமே.
உவர்நிலத்தில்
விளையும் மாவிலங்கின் வடக்கே போகும் வேர்
நெருஞ்சில்
வேர்
சுடுகாட்டில்
விளையும் பேராமுட்டி வேர்
பீளை
வேர்
சிறுபீளை
வேர்
இவற்றை
சமனெடை எடுத்து (தலா 10கிராம்) ஒரு போத்தல் (750மி.லீ) நீர்விட்டு எட்டில் ஒன்றாக வற்றவைத்து
மருத்துவரின் ஆலோசனைக்கமைவாக அருந்துதல் வேண்டும்.
அல்லது,
முத்தானாளடித்த காற்று முதுநரிக்கொம்பு வேரு
மித்திரன் குதிரைவாலு மிலாமிச்சு சந்தனமும்
அந்தமிலாளை யேத்தி அடைவுடன் குடித்தபோது
மந்தமுமற்றுக் கல்லு மாசறவிட்டுப்போமே.
வெங்காரம்
முதியார்கூந்தல்
சந்தனத்தூள்
சுக்கு
இலாமிச்சை
வேர்
இவற்றை
சமனெடை எடுத்து (தலா 10கிராம்) ஒரு போத்தல் (750மி.லீ) நீர்விட்டு எட்டில் ஒன்றாக வற்றவைத்து
மருத்துவரின் ஆலோசனைக்கமைவாக அருந்துதல் வேண்டும்.
தற்காலத்தில்,
சாதாரண
மாவிலங்கம் பட்டை
நெருஞ்சில்
வேர்
நீர்முள்ளிவேர்
என்பவற்றின் குடிநீரையும் வாழைத்தண்டின் சாற்றினையும் மருத்துவரின் ஆலோசனைக்கமைவாக
பயன்படுத்த கல் கரையும்.
No comments:
Post a Comment