Monday, January 27, 2020

வேர்க்குரு, கோடைக் கொப்பளம்

கோடைக் காலத்தில் வியர்வை அதிகமாகும். சிலருக்கு இதனால் தோலில் நமைச்சல் உண்டாகி சிறு சிறு குருக்கள் அல்லது பருக்கள் தோன்றி தோலில் கடி உண்டாகும்.

இது முகம், கை, மார்பு, முதுகு போன்ற இடங்களில் அதிகம் உண்டாகும். கடி, தினவுடிஏற்படும்போது சொறிந்தால் அழற்சி, எரிவு ஏற்பட்டு கொப்பளங்கள் உருவாகும். கிருமி தொற்றினால் சிதழும் காணப்படும்.

இவற்றினை தடுக்க உள்ளழலாற்றி தன்மையுடைய நன்னாரி குடிநீர், இளநீர், மோர், சந்தன ஊறல் குடிநீர் முதலியவற்றை அருந்திவரலாம்.
வேர்க்குரு உள்ள இடங்களுக்கு,

1.சந்தனப்பூச்சு,
2. சந்தனம் (1 பங்கு), பச்சைக்கற்பூரம் (1/4 பங்கு) என்பவற்றை சேர்த்து நீர்விட்டரைத்து பூசலாம்.
3. பனைநுங்கு நீர்
4. வெந்நீர்விட்டரைத்த தேங்காய்ப்பாலில் சீரகத்தை அரைத்துப் பூசலாம்
5. வெந்நீர்விட்டரைத்த தேங்காய்ப்பாலில் ஏலம், கார்போகரிசி, ஆலம்பட்டை அல்லது அரசம் பட்டை என்பவற்றை சேர்தரைத்து பூசலாம்.

 மேற்படி முறைகளை த்துவர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்திக்கொள்ளவும்.

No comments:

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.