Sunday, February 02, 2020

கோரோசனை மாத்திரை

இன்று யாழ் நகரில் உள்ள தமிழ் மருந்துக்கடையில் ஒருவர் பிறந்த குழந்தைக்கு கொடுப்பதற்காக கோரோசனை வேண்டும்போது அவதானித்த விடயம்....
1. அவர் வேண்டியது கோரோசனை மாத்திரை அல்ல. தனியான கோரோசனை.
2. வேண்டிய கோரோசனையும் உண்மையான கோரோசனை அல்ல.
3.அனேகமாக நான் நினைக்கின்றேன் மாட்டின் பித்தம், பச்சைக்கற்பூரம் ,மஞ்சள் சேர்த்தரைத்த போலியானதொன்று.
4.இதன் விலை 10g -350 ரூபா
5. உண்மையான சுத்தமான கோரோசனையின் விலை அனேகமாக 1g -குறைந்தது 2500ரூபாவுக்கு மேல் வரும்.
தயவுசெய்து கடைகளில் குழந்தைகளுக்கான மருந்துகளை மருத்துவர்களின் சிபாரிசு இன்றிவேண்ட வேண்டாம். அரச இலவச வைத்தியசாலைகளை நாடவும். அல்லது பாரம்பரிய சித்தமருத்துவர்களை நாடவும்.

சாதாரன மக்களால் கோரோசனை என்று வழங்கப்படுகின்ற கஸ்தூரி மாத்திரை, யாழ்ப்பாணத்திலே பிள்ளைகள் பிறந்து 40 நாட்களின் பின்னர் கிரந்திக் கொதியெண்ணெய்யுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகின்றது.  இதுகுழந்தைகளை நீராட்டும் நாட்களில்டிசிறப்பாக வழங்கப்படுகின்றது. தற்காலத்தில் காணப்படும் தடுப்பூசி மருந்துகளைப்போன்றே நோய்கள் ஏற்படாதிருக்க வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பலவிதமான நோய்நிலைகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கஸ்தூரி,கோரோசனை, குங்குமப்பூ, தாய்ப்பால் என்பவற்றை சேர்த்து செய்யப்படும் இம்மாத்திரை தற்காலத்தில் மேற்கூறிய கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ என்பன சுத்தமானதாகவும் உண்மையானதாகவும் பெற்றுக்கொள்ளமுடியாது உள்ளதினால், “உரை மாத்திரை” எனப்படும் மாத்திரை தற்போது பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
நோய்வராமல் இருக்கவும், காய்ச்சல், கிரந்தி, மலக்கட்டு, தோடம் போன்ற நோய்நிலைகளில் சித்தமருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தல் சிறந்தது.

No comments:

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.